பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

31


உடல், மனம், ஆத்மா என்று மூன்று பிரிவாக உடலை பிரிக்கிறோம். அல்லவா! அந்த மூன்றுக்கும் ஏற்படுகிற நிலைதான். இந்தச் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் என்பதெல்லாம்.

1. சந்தோஷம்:

இதற்கு ஆங்கிலத்தில் Pleasure என்பார்கள். காரிலே போகும்போது உடலுக்குத் தொந்தரவு இல்லாமல், சங்கடம் இல்லாமல் இதமாக இருக்கின்ற நிலையைத்தான் சந்தோஷம் என்றனர். அதனால்தான் அந்தக் காருக்கு Pleasure Car என்று ஆரம்ப காலத்தில் பெயர் சூட்டினார்கள்.

சந்தோஷம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். சன் + தோஷம் என்று இந்தச் சொல்லைப் பிரிக்கலாம்.

சன் என்றால் ஒன்றுமில்லை. தோஷம் என்றால் குறை.

உடலுக்குக் குறை ஒன்றுமில்லை; நோய் நொடி எதுவுமில்லை என்பதைத் தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எல்லோரும் கூறுவார்கள்.

ஒருவரைப் பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று பதில் வருவதை நீங்கள் கேட்டிருப்பீர்களே! எனவே, உடலுக்குக் குறை இல்லாத ஒரு இனிய நிலைக்கே சந்தோஷம் என்று பெயர். அவரே சந்தோஷக்காரர் ஆகிறார்.