பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் கவிஎன்றும் காவியத்தின் பெருமைஎன்றும்
இம்பர் நலம்பயக்கும் எழில்ஓ வியம்என்றும்

பேசுகின்றார் பாடுகின்றார் பிறநாடர் போற்றும்வண்ணம்
தேசமெங்கும் என்புகழே செப்புகின்றார் பூரித்து

வளர்கின்றேன் ஈதென் வளர்கதையாம் போய்வருவேன்
தளர்கின்ற நிலையின்றித் தாய்மொழியைப் பேணிடுக

தீமை படியவிட்டால் தீயில்தான் வீழ்ந்திடுவேன்
ஊமை எனநீங்கள் உம்மென் றிருக்காதீர்  !

கன்னித் தமிழ்வாழக் காவியச் சுவைவாழ
உன்னிப்பாய் இருந்திடுக ஊறுசெய்வார் பலருண்டே

என்றுரைத்துப் புகையோ டேகிவிட்ட தவ்வுருவம்
நின்றிருந்த நான்வணங்கி நிமிர்கையிலே கைநழுவிப்

பொத்தென்று வீழ்ந்து புரண்டதுகைப் புத்தகந்தான்
மெத்தென் றபடுக்கைமிசைவிதிர்ப்புற்றுக்கண்விழித்தேன

கம்பன் புகன்றகதை கவிபாட உதவுமென்று
நம்பிக் கவிபுனைந்தேன் நான்

181