பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



மக்களபடும் இன்னல்கண் டஞ்சி நீக்க

மனம்வைத்துப் பாடுபடும் தொண்டர் தம்மை

மிக்குவரு காதலினால் அனைத்துக் கொள்ள

மிகக்கொடிய துப்பாக்கிக் குண்டாய் நஞ்சாய்க்

கொக்கரித்து வருகின்றாய் அதனைக் கண்டு

கொடியவள்நீ என்கின்றார்; புரட்சி என்னும்

மக்களை பெற்றெடுக்க மருவு கின்றாய்

ஆதலினால் மதிக்கின்றேன் உன்னை நன்றே