பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடி வருமவர் அடியிணை வருடிச்
சூடி மகிழ்வர் சொல்லவும் வெட்கம்; 50
தீநாய்த் துணையால் திருடர் கவர்ந்தது
தோளால் காத்த சொத்தெனப் புகன்றனை;
வாளால் காத்த நாட்டினை வருவோர்
கவர்ந்திட இங்கே காவல் புரிந்திடும்
அவர்மதி என்னே! என்னே!” 55
என்றுரை கூறி ஏகினன் அவனே

                        ❖
                        203