பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வார்ப்புரு:Xxx largerஆருத் துயரம்} (X largerஎண்சீர் விருத்தம்}} l <Poem>வல்லீட்டி பாய்ந்ததுவே எனது நெஞ்சில்

மாணவர்காள் எவ்வண்ணம் வாய்தி றந்து

சொல்லூட்டித் தமிழ்சொல்வேன்! சோர்வு பெற்றேன்

துடித்துமனம் வெந்துழலத் துயரங் கொண்டேன் வில்லோட்டும் கூரம்போ கொடிய வாளோ
வெள்வேலோ நகைமன்னர் மாய்ந்தார் என்ற

சொல்லலீட்டி பாய்ந்ததுவே! இனிமேல் நாமும்

சுவையாக நகைச்சுவையைக் காண்ப தென்றே!

2 கடுந்துன்பம் எத்துணைதான் வரினும் நெஞ்சம்

கலங்ககலிலான்; சிரிப்பொன்றே துயரை நீக்கி

விடுமென்பான்; மன்பதைக்கும் அந்த வுண்மை -

விளக்கிநின்றன் கண்புதைத்து நாமெல் லோரும்

படுந்துயரம் தனைமறப்ப தெவ்வா றந்தோ!

பகர்ந்துவந்த அச்சிரிப்பு மருந்தாய் ஆமோ?

நெடுங்கடலே! வான்பரப்பே! சுடுநெ ருப்பேl

நிணிலமே! பெருங்காற்றே! அழுதீர் கொல்லோ?<\poem>

208