இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9 நாட்டுக்குச் செய்தபெருந் தொண்டுக் காக
நரிக்குணத்தர் அவற்களித்த தூக்கு மேடை
காட்டுகின்ற சுருள்கயிற்றில், இறந்து பட்ட
காலையவன் சவக்குழியில், எலும்புக் கூட்டில்,
நாட்டிற்காச் செக்கிழுத்து மெலிந்த தோளில்,
நல்லதமிழ் நாட்டெழுந்த இந்திப் போரில், தேட்டாளர் முகங்களிலே அறுத்தெ றிந்த திருத்தாலிக் கயிற்றில்நான் எழிலைக் கண்டேன். ✽ 31