பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படைத்தோன் வாழ்க!

நிலைமண்டில ஆசிரியப்பா

கற்பனை உலகம்

பிருந்தா வனத்தின் பேரெழில் கண்டேன்
பிறந்தார் உறுபயன் பெற்றேன் அன்றே;
அப்பெரும் எழில்நலம் அவனியில் காணத்
தப்பியோர் விழிப்பயன் தப்பியோர் ஆவர்;

எண்ண இயலா வண்ண மலர்கள்
5

கண்கவர் வனப்பொடு கற்பனை பெருக்கும்;
நிலமிசைப் படுபுல் நிமிர்தரு செடிகள்
வலைநிகர் கொடிகள் வகைவகை யாகக்
கைபுனைங் தியற்றிய காட்சியே காட்சி!

இருவிழி எதுவரை எட்டுமோஅதுவரை
10

பரவிய எல்லை படைத்ததப் பூங்கா;
பசுமையும் தண்மையும் பாங்குடன் குழைத்துப்
பூசிய தென்னப் பொலிபூங் காமிசை
வீசிய விழியோர் வியப்புற் றாங்கே

இமையா நாட்டத் தமைவோர் ஆவர்;
15

விண்ணுல குண்டென விளம்புவர் கண்டிலேன்
கண்ணெதிர் கண்டேன்அக் கற்பனை உலகை;

54