பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனைநாள் இப்படியே இன்னலுற்றுச் செத்திடுவேன்? மெத்தவுனே வேண்டுகிறேன் மேவியிதைக் கூறிடுவாய்

வாடகை கேட்டுமிக வாட்டுகி ருர் விட்டார்கள் ; தேடரிய கல்வி தெரிவிக்கும் பள்ளிக்குச்

சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின் ருன் என்பிள்ளை ; கம்பளம் விற்றுக் கடன் கழித்தேன்; கையிருப்போ

ஒன்றுமிலே ; இத்தகைய ஊறு மிக வருத்தக் கன்றியுடல் உன்போல் கருத்தேன் ; விழிசிந்தும்

நீர்த்துளியோ கின்னேப் புறங்கண்டு விட்டதுபோல் ஆர்த்து மிகுகின்ற தையாவோ ! என்ன வரைக்

காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய்; ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும் ;

மெய்யில் உயிர்கிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும்

பையன் பயில் கின்ற பாடம் வளர வெனில்

காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து

பேசு ; பிழையாகப் பேசி வருத்தாதே ;

காதல் முகத்தைக் கண்டு பலநாட்கள் ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான் கண்டு மகிழ்வுபெறக் கண் துடிக்கும் செய்தியையும் விண்டு திரும்பு விரைந்து.

44