எத்தனைநாள் இப்படியே இன்னலுற்றுச் செத்திடுவேன்? மெத்தவுனே வேண்டுகிறேன் மேவியிதைக் கூறிடுவாய்
வாடகை கேட்டுமிக வாட்டுகி ருர் விட்டார்கள் ; தேடரிய கல்வி தெரிவிக்கும் பள்ளிக்குச்
சம்பளம் வேண்டுமென்று சாற்றுகின் ருன் என்பிள்ளை ; கம்பளம் விற்றுக் கடன் கழித்தேன்; கையிருப்போ
ஒன்றுமிலே ; இத்தகைய ஊறு மிக வருத்தக் கன்றியுடல் உன்போல் கருத்தேன் ; விழிசிந்தும்
நீர்த்துளியோ கின்னேப் புறங்கண்டு விட்டதுபோல் ஆர்த்து மிகுகின்ற தையாவோ ! என்ன வரைக்
காணின் அருள்கூர்ந்து காசனுப்பச் செப்பிடுவாய்; ஆணி இருந்தால்தான் அச்சுவண்டி மேலோடும் ;
மெய்யில் உயிர்கிற்க வேண்டுமெனில், பள்ளிசெலும்
பையன் பயில் கின்ற பாடம் வளர வெனில்
காசுபணம் வேண்டுமெனக் காதலர்பால் நெஞ்சுணர்ந்து
பேசு ; பிழையாகப் பேசி வருத்தாதே ;
காதல் முகத்தைக் கண்டு பலநாட்கள் ஆதல் அவரறிவார்; ஆசைக் கணவரைத்தான் கண்டு மகிழ்வுபெறக் கண் துடிக்கும் செய்தியையும் விண்டு திரும்பு விரைந்து.
44