பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றுரைத்தேன் ; நன்றத்தான் இந்த ஊரார் இயல்பெனக்குப் பிடிக்கவிலே, கேர்வி லுக்குச் சென்றிருந்தேன் குழாயடியில் கின்றி ருந்தேன் செழும்புனலில் நீராடச் சென்றேன் அங்கு கின்றிருந்த பேரெல்லாம் பிறர்கு டும்ப நினைவொன்றே கொண்டு குறை கூறிக் காலம் கொன்றிடுவர், அப்பப்பா! கரைத்து மூத்துக் கோலுரன்றும் கிழங்களுமா பேச வேண்டும்? so.

தேன்சுஃாயே! அங்கெல்லாம் இனிமேற் செல்லேல் தேர்ந்தெடுத்துப் பணியாளொன் றமைப்பேன் என்றன் மான் விழியே ! அடுக்களேயும் விடுத்து வந்து மகிழ்ந்திருப்போம் எனப்பு கன்றேன்; நானி ருக்க ஏன் பணியாள்? நன்றத்தான் உங்கள் எண்ணம் ! எழுந்தோடிக் காய்கறுக்கி உங்கட் கென்று நான் சமைத்துப் பரிமாற, நீங்கள் உண்டு,

நன்று நன்று சமையலெனக் கூறும் போது க

கான் காணும் இன்பத்துக் குவமை யுண்டோ? கம்மன்பிற் கிடையூரும் பணியாள் வேண்டாம் ; ஊன்பெருத்தே உதியமரம் ஆக மாட்டேன் ; உலைவாயை மூடவொரு மூடி யுண்டு கூன்காணும் உள்ளத்தார் ஊரார் வாய்க்குக் குவலயத்தில் மூடியிலே ஆத லாலே தேன்காணும் இசைபாடி என்றும் போலத் திகழ்ந்திடுவோம் வாருங்கள் அத்தான் என்ருள் டு

54