பக்கம்:முடியரசன் கவிதைகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுதி கொள்வீர் !

முதலோடு முடிவில்லாப் பெருமை, கான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனேடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுகிலை, வளர்பண்பும், எளிமை யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம் ; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளேஞரெலாம் உறுதி கொள்வீர்!

தெழுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்ருல் கலங்குகின் ருர் ஒருசிலர்தாம் ; உயிரா போகும் ? கலங்கற்க தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதிர் ! தமிழின் மானம் நலங்கெட்டுப் போவதுவோ ? தமிழே இந்த நாடாள வேண்டுமென உறுதி கொள்வீர்!

T8