பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 எழுத்தாகிய தெ’ என்பது தே' என நீண்டு, ஈற். றில் உள்ள ‘கு’ என்ற உயிர்மெய் கெட்டுத் தேங். காய் எனப் புணர்ந்தமை அறிக. 'கெட்டே புணரும்’ என்று கூருமையால் தெங்கு+காய் = தெங்கங்காய் (தெங்கு + அம் + காய்) என 'அம் சாரியை பெற்றுப் புணர்தலும் உண்டு. இலக்கண விதி: காய் என்னும் சொல் வந்து புணரும் பொழுது, தெங்கு என்னும் சொல் முதல் நீண்டு, ஈற்றுயிர்மெய் கெட்டுப் புனரும். தெங்கு நீண் டீற்றுயிர் மெய்கெடுங் காய்வரின். (ந. நூற்பா 187.): 4. மரப் பெயர்ச் சொற்களின் புணர்ச்சி மா - பூ = மாம்பூ விள - காய் = விளங்காய் கள + கனி - களங்கனி 'மா, விள, கள’ என்பன மரத்தைக் குறிக்கும் பெயர்ச் சொற்களாகும். அவற்றின்முன் பூ, காய், கனி என்ற வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள் வரும்பொழுது, அங்ாவனம் வருகின்ற வல்லெழுத்துக்காக்கு இனமான மெல்லெழுத் துக்கள் வேற்றுமைப் புனர்ப்பியில் வரும். "இயல்பினும் விதியினும் மின்ற உயிர்முன் க, ச, த, ப மிகும்’ என்ற பொது விதிப்படி, வாழை + காய் - வாழைக்கா ய் பலா + காய் - பலாக்காய் என்பனபோலச் சில இடங்களில் வல்லினம் மிக் குப் புணரும்.