பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35



16. வல்லமை தந்தருள்வாய்

முத்தமி ழேஉனை எப்பகை யாகினும்
          முற்றிட முன்வருமேல்
எத்தடை மோதினும் அப்படை யாவையும்
          எற்றிமு ருக்கிடுவேன்
எத்துயர் நேரினும் அத்தொழில் ஆற்றிட
          எப்பொழு தும்தவறேன்
மத்தக யானையைச் செற்றிடும் ஏற்றரி
          வல்லமை தந்தருள்வாய்.

[தாய்மொழி காப்போம்]