பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதியவர் இளைஞன் முதியவர் இளம்பெருவழுதி காட்சி -1 ஒவியஞ் சிற்பம் ஒருங்குட னமைந்த காவியக் கோட்டையுட் கருத்துணர் வூட்ட ஆவலில் முதியர் ஆர்வநல் லிளைஞனைக் கூஉய் விளக்கங் கூறினர் அவற்கே _ _ _ _ _ _ _ பூமலர் பொய்கையுட் பூவையர் குழுமிக் காமரு புனலிற் களிப்புடன் ஆடலும் தையலர் முகமோ தாமரை மலரோ ஐயுறும் வகையான் அமைந்ததுங் காண்நீ விரும்பித் தேனுணச் சுரும்பினம் வருடித் திரும்பித் திகைத்துச் சேறலும் நோக்குதி: பழுதிலீர் நுந்தம் பகர்வா லன்றோ எழுதிய ஓவியம் இதுவென வுணர்ந்தேன். ஒ ஓ இவைதாம் உயிரோ வியமே. காவா திருப்பிற் காண்பமோ இதன்றிறம்? இலைநிகர் எனுமா றேத்திப் புகழும் கலைபல தேர்ந்த கைத்திறம் வல்லார் முன்னையர் பன்னுற் றாண்டின் முன்னர் அந்நல் லோவியம் எழுதினர் அறிகதில்: