பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்க்கீர்த்திகள்

107



மத்தவெங் கரிபடு மய்யச் சையமும்
கன்னியுங் கைக்கொண் டருளித் தென்னாட்
டெல்லை காட்டிக் கடன்மலை நாட்டுள
சாவே றெல்லாந் தனிவிசும் பேற
மாவே றியதன் வரூதினித் தலைவரைக்
குறுகலர் குலையக் கோட்டா றுட்பட
நெறிதொறு நிலைகளிட் டருளித் திறல்கொள்
வீரசிம் மாசனந் திரியவிட் டருளி
வடதிசை, வேங்கை மண்டலங் கடந்து தாங்கலர்
கலிங்க மேழுங் கனலெரி பரப்ப
விலங்கல் போல விலங்கிய வேந்தர்
விட்டவெங் களிற்றோடு பட்டு முன் புரளப்
பொருகோ பத்தொடு போர்முக மதிர
வருகோ மட்டையன் மாதவ னெதிர்பட
எங்க ராய னிகலவ ரேச்சணன்
மாப் பிறளா மதகரி யிராசணன்
தண்டுபதி யாகிய தலைச்சே னாபதி
மண்டலிக தாமய னெண்மர்த் திசைமுகன்
போத்தயன் கேத்தணன் செருச்சே னாபதி எ
ன்றிவ ரனைவரும்
வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யொடுவெண் ணிணங்கழு கோடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப வுயர்த்துக்
கருங்கட லடையத் தராதலந் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண் டலங்கல்
ஆரமுந் திருப்புயத் தலங்கலும் போல
வீரமுந் தியாகமும் விளங்கப் பார்தொழச்
சிவனிடத் துமையெனத் தியாக வல்லி