பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

முதற் குலோத்துங்க சோழன்

கின்றது. அரசன் இவரது புலமைக்கு வியந்து தன் அவைக்களப்புலவராக இவரை இருக்கச் செய்தனன் என்று தெரிகிறது.

இவர் அரசனுக்கு விடைகூறிய பாடலில், பொய் கொலை முதலியன நீக்குதலையும், சமணர்க்குச் சிறந்த இரவுண்டல் தவிர்தலையும், தமதூர் சைனக்கடவுளின் தலமாயிருக்கும் சிறப்பையும் எடுத்துரைத்துப் புகழ்ந் திருத்தலால் இவர் சைனமதப் பற்றுடையவராயிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. இவர் தாம் பாடியுள்ள கலிங்கத்துப்பரணியில் கடவுள் வாழ்த்து என்ற பகுதியில் சிவபெருமான், திருமால், நான் முகன், சூரியன், கணபதி, முருகவேள், நாமகள், துர்க்கை , சத்த மாதர்கள் என்ற இன்னோர்க்கு வணக்கங்கூறியிருத்த லாலும் இவர்களுள் சிவபெருமானுக்கே முதலில் வணக்கங்கூறியிருத்தலாலும் இவர் பரணிபாடியகாலத்தில் சைவமதப் பற்றுடையவராக மாறி இருத்தல் வேண்டுமென்பது நன்கு விளங்குகின்றது. ஆகவே, இவர் முதலில் சைன மதப் பற்றுடையவராயிருந்து சைவமதத் தினனாகிய குலோத்துங்கசோழனையடைந்து அவனது அவைக்களப் புலவராயமர்ந்த பின்னர், சைவமதப் பற்றுடையவராயினார் போலும்.

இனி, இப்புலவர் தம்முடன் வாதம்புரிவான் போந்த தென்னாட்டுப்புலவர் சிலரை வென்ற காரணம் பற்றி, 'சயங்கொண்டார்' என்றழைக்கப் பெற்றனர் என்பர். ஆயின் இவரது இயற்பெயர் யாதென்பது இப்போது தெளியக்கூடவில்லை.