பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4: கண்ணுக் கேற்றவர் பட்டனேயல்லாது காண்கிலோம் பூமிதனி லொருவர் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் நமக்கெத்தனை கேட்டாலும் தான் கொடுப்பார். அத்தனருள் பெற்று நித்தியம் வாழ்வாரென்று ஆனந்தக் கும்மி யடிப்போமடி திருமணச் சடங்குகள் முடித்து பட்டன் ஒய்வு கொள்ளல் வஞ்சிப்பகடை’ கெஞ்சிக் கும்.மியடித்து வட்ட மணவறைகிட்ட வந்து வாலப் பகடையும் சேருப்பகடையும் வள்ளிப் பகடையும் ஊமச்சியும் கோவில் பகடையும் சிவனிப்பகடையும் பொம்மி பகடையும் சோனியரும் ராச்சி பகடையும் சின்ன பகடையும் நாச்சிபகடையும் பாபாக்களும் தாலைந்து பகடையும் ஒன்றாகக்கூடி நத்தையும் சட்டியிலே சோறு வைத்து நல்விருந்து களித்துச் சாராயம் கள்ளுக்குடித்த வெறியுடனே கள்ளும் சாராயமும் இறைச்சியும் எச்சியும் கொள்ளாமலே முத்துப்பட்டனுக்கு கண்ணிலே காயநீர் வந்திறங்கியே கஷ்டப்படுகிற வேளையிலே கலியாணச் சடங்கு முடியுமுன்னே யிந்தகாலப் பிழைவந்தது பட்டனுக்கு பொம்மக்கா மடியில் காலைவைத்தான் திம்மக்கா மடியில் தலையை வைத்தான், பெண்களிடத் தன்னில் நித்திரை போகவே அங்கொரு சொப் பணம் - g< ע, יריע கண்டானாம் பட்டன் கண்ட கனவு நித்திரை தனிலே பொல்லாத சொப்பனம் துர்க்குறியாகவே கண்டானாம் கருமயிலைக்காளை கிடைவிட்டோடி கசத்தில் விழுந்திறக்கக் கண்டானாம். நேரிட்டுவந்து ஒருகடுவாயது’ கூறிட்டுக்கீறவும் கண்டானாம் கையிலே கட்டிய காப்பு நூல்தன்னை கறையானரித்திடக் கண்டானாம் கோழிக் கூட்டுக்குள் விருகுவந்து" நல்லகுஞ்ச் பெட்டையும் கொள்ளக் கண்டான். கொண்டையறுத்து மலையிலே தூக்கிக் கிடக்கக்கண்டான் பட்டன் கனவுதன்னை