இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
அகமேய ஐந்திணை யின்முற்
- றிணையில் அலர்மலராத்
திகழ்வார நின்ற குறிஞ்சி
- புறமாந் திணையில்முதற்
புகல்வாரும் வெட்சி இவை நினக்
- காமெழிற் பூக்களன்றோ
மகவான் தொழுமரு தாசலம்
- மேய மயிலவனே.
(37)
மயில்அவன் வாகனம் அஃதே
- பிரணவ மாமனுவாம்
மயர்வறு மோங்காரச் சோதியி
- னுள்ளே வயங்குகின்ற
ஒயிலினைத் தோகை மயிலிடைத்
- தோன்றும் உருவுணர்த்தும்
குயிலுறு சோலை மருதா
- சலத்துறை கோவினுக்கே.
(38)
கேடற்ற சோதிஎன் கேடறுப்
- பான்இக் கிளர் வியில்
ஈடற்ற இன்பம் அருளுகின்
- றான்மது வீட்டமெனப்
37. மகவான்-இந்திரன். அகத்திணையில் முதல் திணைக் குரிய பூவும் புறத்தினேயில் முதல் திணைக்குரிய பூவும் முருகனுக்கு உரியன என்றபடி. -
38. மனு-மத்திரம் ”ஆன தனிமந்த்ர ரூப நிலைகொண்ட தாடு மயிலென்ப தறியேனே” என்பது திருப்புகழ். மயர்வு அறு மயக்கத்தைப் போக்கும். ஒயில்-அழகு.