பக்கம்:முருகன் அந்தாதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


இங்கே ஒவ்வொரு மாதமும் வழிபாடுகளை நடத்தி உணவு வழங்கும் தொண்டைப் பல நிறுவனங்கள் நிகழ்த்தி வருகின்றன. 1956-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் திரு அருணகிரிகாதர் அருள்நெறிக் கிருத்திகைக் கழகம் ஒவ்வொரு கிருத்திகையிலும் விழா நடத்திவருகிறது; ஆண்டு விழாவோடு படி. விழாவையும் நடத்தி மக்களுக்கு அன்பையும் அற உணர்வையும் ஊட்டி வருகிறது.

இந்தக் கழகத்தினரின் விருப்பப்படி இந்த அந்தாதி முருகன் திருவருள் துணை கொண்டு பாடப்பெற்றது. ‘நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனா’கிய முருகன் இதனைப் படித்துத் துதிப்பவர்களுக்கு, நலம் தந்தருளுவான் என்றே நம்புகிறேன்.

15–12–66 கி. வா. ஜகந்நாதன்