பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முருகவேள் திருமுறை 15 ஆம் திருமுறை மறப்புரிசை வளையு மிலங்கை யரக்கனொரு பதுமுடி சிந்த வளைத்தசிலை விஜய முகுந்தன் மருகோனே. மலர்க்கமல வடிவுள செங்கை அயிற்குமர "குகைவழி வந்த மலைச்சிகர வடமல்ை நின்ற பெருமாளே.(1) 245-1. கதிபெற தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தனதான சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனன மரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே; கருணைய விழியொழி யொருதணி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதை யமுதமொழி தருபவ ருயிர்பெற வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு #மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியு முனதுதிருவடிநிழல் தருவது மொருநாளே. 'பார்வதியுடன் மாறுபட்டு முருகவேள் கந்தகிரியை விட்டு பாதாளத்துக்குச் சென்று அங்கிருந்து ஒரு குகை வழியாக வந்து திருவேங்கட மலையில் எழுந்தருளினார் என்று ஒரு வரலாறு. இதனை "அண்ட மன்னுயிரின்றவ ளுடன்முனி வாகித் தொண்ட கங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து மண்டு பாதலத் தேகியே யோர்குகை வழியே பண்டு தான்வருவேங்கட கிரியையும் பார்த்தான்." 19