பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை புயப்பணி கடப்பந் தொடைச்"சி கரமுற்றின் புகழ்ச்சிய முதத்தின் tபுலவோனே; திரட்பரி கரிக்கும் பொடிப்பட வுணர்க்குந் தெறிப்புற விடுக்குங் கதிர்வேலா. சிறப்பொடு குறப்பெண் களிக்கும்வி சயத்தென் திருத்தணி யிருக்கும் - பெருமாளே. (14) 263. திருப்புகழின் பெருமை திருப்புகழ் ஒத தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனதான சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச். சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம், நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் சிக்கரு வறுக்கும் பிறவாமல். #நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புகழுரைக்குஞ் செயல்தாராய், "சிகரம் - உயர்ச்சி, ஸ் துால பஞ்சாகூடிரம் - நமசிவாய சூrம பஞ்சாக்ஷரம் - சிவாய நம காரண பஞ்சாக்ஷரம். சிவாய சிவ; மஹா பஞ்சாக்ஷரம் - சிவ", மஹாபது - சி காரம் என்பர். (பூ பஞ்சாக்ஷர விளக்கம் - பக்கம் 11 - திருப்புகழ் 207 பக்கம் 28 - பார்க்க. சிவாயநம - என்பதில் சி காரம் சிவத்தையும், வகாரம் அருட்சத்தியையும். யகாரம் ஆன்மாவையும், நகாரம் திரோதானத்தையும். மகாரம் ஆணவ மலத்தையும் உணர்த்துவனவாம். சிகார வகாரங்கள் பதியையும், யகாரம் பசு வையும், நகார மகாரங்கள் பாசத்தையும் விளக்குவனவாம். (பூ பஞ்சாகூடிர விளக்கம் பக்கம் (13) இதனால் தான் சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்' என்றார் (திருப்புகழ் 658). tபுலவோன் - இது சம்பந்தரையும் குறிக்கலாம்.

  1. இறைவன் திருப்புகழ் நெருப்பையும் எரிக்கும் (உதாரணம்) ஞால் நின்புகழே மிக வேண்டுந் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே' எனச்

பக்கம் 157 பார்க்க