பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம் பு: நீயென் வசந்தகாலக் கனவுகள் பற்றிப் பேசுகிறாய். நான் என் - இலையுதிர் காலத்தைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன். நான் இல்லாமல் இருந்திருந்தால் கோவலனும் கண்ணகியும் நீண்டகாலம் வாழ்ந்திருப்பார்கள். நான் ஓர் ஏழைப் பெண்ணின் காலில் வெள்ளிச் சிலம்பாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறேன். அவ்வாறு பிறந்திருந்தால் வஞ்சிப்பத்தன் என்னைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்கமாட்டான். பாதுகையே! நீ அயோத்தி வாசி நான் புகார் வாசி என்றாலும் - நாம் இருவரும் ஒரே சாதி. புரியவில்லையா? நீயும் காலணி ! நானும் காலணி ! என்றாலும் . உன் பெருமை எனக்கு வராது. 虏பாரத கண்டத்தின் பழைய ஜனாதிபதி. பாதுகை: (மெதுவாகச் சிரித்துவிட்டு) ஓ ! அதைச் சொல்கிறாயா? கவிஞர் முருகுசுந்தரம் 52