76
முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
புகழ்பாடும் ஒரு தமிழின எதிர்ப்பு இலக்கியமாகக் கண்டார்கள். சிலப்பதிகாரமோ வடவணை வென்ற தமிழனின் மரம்பாடும் பெருங் காப்பியமாகப் போற்றப்பட்டது. திருக்குறள் வேதத்திலும் உயர்ந்தது என்ற சைவ மரபு இவர்களால் மேலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. புறநாநூற்று வீரமும், அகநாநூற்றுக் காதலும் மக்களிடம் பெரும் செல்வாக்குச் செலுத்தின. திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து ஒரு அரசியல் சக்தியாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக்கழகம் இந்தக் கருத்துக்களைத்தான் அரசியல் நலன்களுக்காக மிகத் திறமையாகப் பயன்படுத்திற்று. அதே காலத்தில் ம.பொ.சியின் தமிழரசுக் கழகம் அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டாலும், அதுவும் கலை இலக்கியத்துறையில் மிகுந்த அக்கறை காட்டிற்று. சிலப்பதிகாரம் திராவிட இயக்கத்தினரால் ஒரு இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது. இவர்களோ அதை ஒரு மாபெரும் மக்கள் காப்பியம். அரசனுக்கு எதிராக ஒரு குடி மகள் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் - நடத்திய போராட்டம் பற்றிய காப்பியம் என்ற புதிய அணுகு முறையைக் கொடுத்தார்கள். இதே காலத்தில் சைவ இயக்கத்தின் வளர்ச்சியாக மறைமலையடிகளார் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கமும் அமைப்பு வடிவமும் பெற்றது. தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை வலியுறுத்திய இவர்கள் புதிதாகத் தமிழில் சேர்ந்த சொற்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்குப் பிரச்சாரம் செய்தார்கள். கூடிய மட்டிலும் தமிழில் எழுத வேண்டும் என்ற இன்றைய போக்கு இதன் பலனாகத் தோன்றிற்று. இன்னொரு பக்கம் பகுத்தறிவுச் சிகரம் சிங்கார வேலனார் மார்க்சீயத்தைத் தமிழ் சமூகத்துக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கினார். அதோடு சேர்ந்து கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் புதிய சமூகவியல் அணுகுமுறைக்கும் அவர் வித்திட்டார். இந்த வழியில் சைவம் சார்ந்த - பெண் விடுதலை சார்ந்த - உழைப்போர் சார்ந்த - ஒரு கலை இலக்கியப் போக்கை பாரதியின் கலை இலக்கியப் போக்கை - முன் கொண்டு செல்வதில்