பக்கம்:முல்லைக்காடு, பாரதிதாசன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சோலை

விரைமலர்த் தேன் வண் டெல்லாம்  
வீணையை மிழற்ற, ஆங்கே
மரங்கொத்திப் புட்கள் தாளம்
வகைப்படுத் திடத், தடாகக்
கரையினில் அலைக்கரங்கள்
கவின் மிருதங்கம் ஆர்ப்பக்,
கருங்குயில் பாடத் தோகைக்
கணிகை நின்றாடும் சோலை!

வானவில் ஏந்தல் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்,
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆநந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாவை
மல்லிகை சிரிக்கும் சோலை!

நெல்லியும் கமுகும் ஆலும்
நெடுங்கிளைக் கரம் வளைத்துச்
சொல்லுக இரண்டி லொன்று
தொட்டிழுத்திடுவோம் என்ன,

 

10