உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 யளிக்கிறார்கள்? கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் வணங்க அவர்களுக்கு ஒரு ஏசுநாதர். பல லட்சக்கணக் கான முஸ்லீம் மக்களுக்கு ஒரு நபி. நீ சக்கிலியன். சண் டாளன், பள்ளன், பறையன் எனப் பிரித்துவைத்து முப் பத்து முக்கோடி தேவர்களையும். பல்லாயிரம் ரிஷிகள், கின்னரர்,கிம்புருடர், அட்டதிக்கு பாலகர்கள், காளி, காட் டேரிகள், எக்ஸெட்ரா எக்ஸெட்ரா உண்டுபண்ணி வைத் திருக்கிறாயே ? இவ்வளவு பெரிய கடவுள் கூட்டம் உனக்குத் தேவைதானா ? 22 கோடி இந்துக்களுக்கு 33 கோடி கடவுள் கூட்டத்தை உண்டு பண்ணி ஒரு ஆளுக்கு ஒன்னரை வீதம் ஏற்படுத்தி இந்த நாட்டைப் பாழாக்கியிருக்கிறாயே? இதுவும் போதாதென்று கிருஸ்தவ மதத்திடமும். இஸ்லாமிய மதத்திடமும் அல்லவா கடவுள் பிச்சைக் கேட்டுக்கொண்டு அலைகிறாய் ? எதை நீ விட்டு விட்டாய்? மைல் கற்களைத் தவிர மற்றதெல்லாம் கடவு ளென்று அல்லவா எழுதி வைத்திருக்கிறாய். மேல்நாட்டுக் காரனும் உன்னைப்போலத்தான் கடவுளைக் கும்பிடுகிறான். எப்படி வணங்குகிறான். கருடன் ஆகாயத்திலே பறப்ப தைப்பார்த்து, அதைப்பிடித்து, அதன் இறக்கைகளை ஆராய்ந்து, பருந்தின் பருமனை நிறுத்து, காற்று புக முடியாத சூன்யப் பிரதேசமாக அமைந்திருக்கும் அதன் இறக்கை எலும்புகளைப்பார்த்து இன்று பறக்க கற்றுக் கொண்டான். பருந்து பரக்கிறதைப் பார்த்து 'கிருஷ்ணா ! கிருஷ்ணா !' என்று கன்னத்திலடித்துக்கொள்வதை தவிர நீ எதைக் கற்றாய்? கடல் நீரிலே மீனைப்பார்த்தான், எப்படி நீரை கிழித்துச் செல்லுகிறதென சிந்தித்து. கப்பலைக் கட்டி னான், சப்மெரினைக் கண்டு பிடித்தான்• நீ மச்சக்காவடி தூக்கி ஆடுவதையும், மீனைப் பிடித்து கரியாக்கி தின்பதை யும் தவிர எதைக் கண்டாய் ? பெரிய பெரிய மலைகளைப் பார்த்து, அவற்றைக் குடைந்து, ரயில் பாதைகளை, ரோடு 1