உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைக் கொல்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 தஞ்சையா, நஞ்சையா என்ற செல்வம் கொழிக்கும் தெரு வீதிகளிலே பிள்ளை வியாபாரம் ஆச்சாரியாரின் ஆட் சியிலே / வட நாட்டு பம்பாயிலே உள்ள பிச்சைக்காரரில் 100-க்கு 95 பேர் தென்னாட்டு பிச்சைக்காரர்கள் இவர் களெல்லாம் பரம்பரை பிச்சைக்காரர்களா - இல்லை யில்லை தோழர்களே சுயராஜ்ய ஆட்சிக்கு முன்பு வரை நல்வாழ்வு நடத்தி வந்த தமிழன் இன்று வடநாட்டு ஆதிக்க சுரண்ட லால் தாயகத்தில் பிழைக்க வழியின்றி வளம் கொழிக்கும் வடநாட்டிலே பிச்சைக்காரர்களாய் பஞ்சைகளாய் வாடு கின்றனர். இதைப் பார்க்கும்போது எங்கள் உள்ளம் வேதனையடையாதா ? நெஞ்சம் வெடிக்கும் செய்தி இது. L இத்தகைய அவலநிலை ஒழிந்து திராவிட கூட்டரசு மலரத்தான் நம் தி. மு. கழகம் பணியாற்றி வருகிறது. திராவிடம் பிரிவதென்றால் கத்தியைக் காட்டி, வாளைக் காட்டி. இரத்தத்தை சிந்தும் அளவிற்கு அல்ல. அமைதி யான முறையிலே. அறிவு முறையிலே, பூகோள, இன வரலாற்று அடிப்படையிலே, மாண்ட நம் வல்லரசை நினைவுறுத்தி மீண்டும் பெற கேட்கிறோம். பாகிஸ்தானுக்கு ஒரு ஜின்னா கிடைத்ததைப்போல, திராவிடத்திற்கு நம் அண்ணா. அத்தகைய தலைமையின் கீழ் போராட ஆயிரக் கணக்கில் அணிவகுத்து நில்லுங்கள். திராவிடக் குடியரசு மலரப் போகும் நாளிலே, பம்பாயிலுள்ள திராவிடத் தனி யரசுக் கொடியை யேற்ற, சிங்கப்பூர் தோழர்கள் அதை பறக்கவிட. ஆப்பிரிக்கா தோழர்கள் பண்ணிசைக்க இலங் கைத் தோழர்கள் வீர வணக்கமிடும் காட்சியை நாம் காணவேண்டும். அத்தகைய விடுதலைக் கிளர்ச்சிக்கு பம்பாய் தோழர்க வாகிய நீங்கள் கட்சி வேறுபாடின்றி, சொந்த மண் மாற்