உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பாகுபாடு க-முதல் ஈ-அடிகள், கார்கால மாலைப்பொழுது கார்காலம் இப்போதுதான் தொடங்கியதாகளின் கரிய முகில் மிகவும் நீரைப் பொழிந்தது. 'பெரும் பெயல்' என்பது கார்காலத் தொடக்கத்திற் பெய்யும் முதற்பெயல், இதனைத் 'தலைப்பெயல்' என்றுஞ்சொல்லு வர். இங்ஙனம் முதற்பெயல் பொழிந்துவிட்ட நாளின் மாலைக்காலம் முதலிற் சொல்லப்பட்டது. தலைவன் குறிக் துப்போன கார்காலம் வரதது என்பதனை அறிந்த தலைவி அவன் வருகையை நினைத்து மயங்கி இருததலும், அவ் வாறு இருப்போள் மயக்கந்தீர அவன் மீண்டு வருசலும் இய பாட்டின்கட் சொல்லப் படுதலின், அவற்றிற்கு இசைந்த கார்கால மாலைப் பொழுதை முதலிற் கூறினார் என்றறிக. கா-முதல் உச-அடிகள். தலைமகள் தனிமையும் அவளது பிரிவாற்றாமையும் வேனிற்காலத் தொடக்கத்திலே பகைவயிற் பிரிந்த தன் காதலன் சொன்ன கார்காலம் வநதும் அவன் வந்தி லாமையின் தலைமகள் பெரிதும் ஆற்றாளாகின்றாள். அது கண்டு ஆண்டின் முதிர்ந்த பெண்டிர் அவளை ஆற்றுவிக் கும்பொருட்டுத் தம் ஊர்ப்பக்கத்தே யுள்ள மாயோன் கோயிவிற் போய் நெல்லும் மணங்கமழும் முல்லைப்பூவுக தூவி வணங்கி நற்சொற் கேட்பநின்றார்; நிற்ப, அங்கே அருகாமையிலிருந்த மாட்டுக் கொட்டிலில் நின்ற ஓர் 7