உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டின் பொருள் நலம் வியத்தல் கடலில் முகந்த நீரைப் பொழிந்து கொண்டே எழுந்து உயர்ந்த கரியமுகிலிற்கு, மாவலிவார்த்த நீர் ஒழுகுங் கையுடனே ஒங்கி வளர்ந்த கரிய திருமாலை ஒப்புமை கூறியது மனனுணர்விற்கு இசைந்த உவமை யாகப் பொருநதிகிற்கின்றது. நிலத்தில் ஊன்றிய வில்லி லே அம்பறாத்தூணியைத் தொங்கவிட் டிருப்பதற்குப், பார்ப்பனத் துறவி காவிக்கல்லில் தோய்த்த உடையைத் தனது முக்கோலிற் றொங்கவிட்டிருப்பதை உலமை கூறி யது மிகவும் பொருத்தமாக விருக்கின்றது. இதனால் இவ் வாசிரியர் துறவிகளிடத்துப் பழக்கமுடையர் என்பதுந், துறவொழுக்கத்தில் வேட்கை 1501_111 ரென்பதுங் குறிப்பாக அறியப்படும். மெய்காப்பாளர் பாடி வீட்டில் இடையாமத்திலே தூக்கமயக்கத்தோடும் அசைந்து திரிதல், பூத்த புனலிக் கொடி படர்நததூறு வாடைக்காற்றில் அசைவதுபோல் இருக்கின்றது என்பதனாலுங், காயாமலர் கறுப்பாகவங், கொன்றை பொன்னிறமாகவுந், தோன்றி சிவப்பாகவும் இருக்கும் என்பதனாலும், வரகங் கொல்லையில் மான்கள் தாவிக் குதிக்கின்றன, கார்காலத்தில் வள்ளிக்கிழங்கு முற்றிவிடுகின்றன என்பதாலும், இவர் இயற்கைப் பொருள்களைக் கண்டறிவதிலும், அவற்றைத் தாங்கண்ட வாறே சொல்வதிலுந் திறமை மிக்குடைய ரென்பது இனிது விளங்கும். இன்னும், முது பெண்டிர் நற்சொற் கேட்கும் பொருட்டு ஊர்ப்பக்கத்தே திருமால் கோயிலிற் போய்