உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள் இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க் கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், [தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுநது) தமக்கு வேண்டியவா றெல்லாஞ் சொற்களை அலைத் தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் 'மாட்டு, என்னும் இலக்கண மாமென அதனியல்பைப் பிறழஉணர்த்து வழுவினாரென் பதனை முன்னரேகாட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர்உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட்பொருள் நெறிப்பட்டொழுகும் இயற்கை நன் முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றாம் (க-கூ அடிகள்) பெரியகையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுத்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த மாலைக்காலம்: எனக. கரிய நிறம் பற்றியும், உலக மெல்லாம் வளைந்த தொழில் பற்றியம்,நீர் ஒழுகாகிற்ப நிமிரர்தமைபற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமைகூறினார். மாலலிவார்த்தநீர் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல், நீரைஈ சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க. நனந்தலை அகன்றஇடம். நேமி-சக்கிரம். வலம்புரி பொறித்த - வலம்புரிச்சங்கை வைத்த; "வலம்புரிபொறித்த