பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பதிப்பு உரை முல்லைப்பாட் டாராய்ச்சி புரையின் முதற் பதிப் புப் பிரதிகள் நெடுநாட்கள் முன்னரே செலவழிந்து போயின. அதனை மீண்டும் பதிப்பித்துத் தரும்படி பலர் பலகாற் கேட்டும், அதனைப் பதிப்பிடுதற்குச் செலவிடும் பொருள் பதிப்பிட்ட பின் புத்தக விலை யாற் பெறக் கூடாபற் போய்விடுதலானும், இங்ஙனமே யான் புத்தகங்கள் பதிப்பிடுதலில் இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் இழந் தேனாகையாலும் அதில் நோக் கமின்றி யிருந்தேன். இவ்வருஷத்திய பி. எ. வகுப்பு மாணவர்களுக்கு முல்லைப்பாட்டுப் பாடமாக இருத்த லால், எங்கள் கலாசாலைப் பி. ஏ. வகுப்பு மாணவர் கள் இதன் ஆராய்ச்சி யுரையைப் பதிப்பிட்டுத் தரும் படி என்னை வேண்டியதோடு, அப்பதிப்பிற் காம் செலவும் முன்னர்த் தந்து உதவி செய்தமையால் இதனை மீண்டும் பதிக்கலாயினேன். இப்பதிப்பின் கட் சி40 கூட்டியும் சில குறைத்தும் விளக்க உரைக் குறிப்புகள் பல சேர்த்தும் திருத்தங்களும் மாறுதல் களும் செய்திருக்கின்றேன். இப்பதிப்புக்கு மாணவகரிடம் பொருள் திரட்டி உதவி செய்த மாணவர் ஸ்ரீ அரங்க ரா மா நுசம் அவர் களுக்கு யான் நிரம்பக்கடமைப்பட்டிருக்கின் றேன். சென்னைக் கிறித்துவ ) கலாசாலை. ( டிசம்பர் 7-1910) நாகை வேதாசலம் பிள்ளை.