பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பா.

117



அவளும் சுகன்யாவும் சேர்ந்து கட்டிக் கொண்டிருப்பது போல் பிரசுரமாகி இருக்கும் புகைப் படம் ஏது? எப்போது எடுத்தது? என்ற சந்தேகம் கண்ணனுக்கு வந்தது. பாகவதர் பரவாயில்லை."பக்கத்து வீட்டுக்கார ரோடு எனக்குச் சுமுகமான உறவு இல்லை. ஆகவே அவரைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை' என்று தப்பித்துக் கொண்டுவிட்டார். இந்த அம்மிணி அம்மாளின் பெண் நந்தினிதான் கொஞ்சம் நம்மைப் பற்றித் தாறுமாறாகச் சொல்லியிருக்கிறாள். செக்ஸ் ராணி அடங்காப் பிடாரி என்பதை நிரூபித்து விட்டாள். நான் கோபக்காரன் என்று கேள்விப் பட்டிருக்கிறாளாம். கொடுமைக்காரன் என்று தெரிந்து கொண்டிருக்கிறாளாம். வினிக்காம். வரட்டும். இவளை இப்படிப் பேசுவதற்குத் துணியச் செய்த சுகன்யாவைத்தான் மடக்கவேண்டும். இந்தக் கோளாறாண குடும்பத்தோடு இரகசியமாக எனக்குத் தெரியாமல் சுகன்யா பழகப் போகத்தானே இவ்வளவும் வந்து தொலைத் திருக்கிறது. சுகன்யாவுக்கு உடனே பாடம் புகட்டியாக வேண்டும் என்று மனத்திற்குள் தன் மனைவியைக் கறுவிக் கொண்டான் கண்ணன். . .

அம்மிணி அம்மாவையும் பாகவதரையும் பற்றித் தான் பத்திரிகைப் பேட்டியில் கொடுத்த தகவல்கள் எவ்வளவு துாரம் அவர்களைக் கேவலப் படுத்துமோ அந்த அளவுக்குத் தன்னேக் கேவலப்படுத்திய பாகவதரேர். நந்தினியோ எதுவும் சொல்லி விடவில்லை என்ப்து கண்ணனுக்கு ஆறுதலாக இருந்தது. வீனாக எதை எதையோ கற்பனை செய்து கொண்டு தான் அவர்களைப் பற்றி இத்தனை கேவலமாகச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று கூட இப்போது நினைத்துக் கழிவிரக்கப்பட்டான் கண்ணன். பாகவதரோ, அம்மிணியோ அந்த மல்யாளப் பத்திரிகையைப் படித்தது பற்றி எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.

அன்றே தன் மனைவியிடம் அந்த மலையாளப் பத்திரிகை