பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

முள்வேலிகள்



இதைக் கேட்டுப் பாகவதர், அம்மிணி அம்மாள், சுகன்யா மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஷ்டி: யோடு சிரித்துக் கொண்டனர். .

அது தண்ணியோ, பழைய விரோதமோ, அவுட்லெட் இல்லாடி ரொம்ப நாள் உள்ளேயே தேங்கினா அழுகி நாறத்தான் நாறும்’ என்று கண்ணன் தனக்குள் முணு முணுத்துக் கொண்டான். :

வெளியே மாடிப்படி அருகில் குழந்தைகள் தண்ணிரில் காகிதக் கப்பல்கள் செய்துவிட்டுக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தன.

நான்கு நாட்களாக வராமலிருந்த மின்சாரம் வந்து திடீரென்று எல்லா விளக்குகளும் பளிச்சென எரிந்தன. ரேடியோ திடுதிப்பென்று பாட ஆரம்பித்தது. கண்ணன் ஜன்னல் வழியே தன் வீட்டை எட்டிப் பார்த்தான்.

காம்பவுண்டுச் சுவர்கள் விழுந்து நாலு பக்கமுமே வழி ஏற்பட்டிருந்ததால் தண்ணிர் முற்ருக வடிந்து கீழே தரை தெளிவாகவும் நன்றாகவும் தெரிய ஆரம்பித்திருந்தது.