நா.பா
201
“மனசு சரியில்லே...எதிலியுமே நாட்டம் போகலே. இப்பிடியே இருந்த ஒரு நா அறையிலேயே ‘சூயிஸைட்’ பண்ணிக் கிட்டுக் கிடந்தாலும் கிடப்பேன்...”
“.........”
—இதைக் கேட்டு ஒரு நிமிஷம் தயங்கி யோசித்தபின் சிக்கலின் ஏதோ ஒரு நுனி தனக்குள் அகப்பட்டுவிட்டவனைப் போலச் சுகவனம் மெல்ல வினவினான்
“நீயும் சுலட்சணாவும் இப்பல்லாம் ஒருத்தரை ஒருத்தச் பார்த்துக்கிறதே இல்லையா கனகராஜ்?”
“இல்ல அவளுக்கு என்னப் பிடிக்காமப் போச்சோ என்னமோ...?.”
“இஃப் ஐ யாம் நாட் இன்க்யுஸிட்டிவ்.ஏ ஸ்டெரெயிட் க்வஸ்ச்சின்...”
“என்ன? கேளேன்...”
“சுலட்சுணாவும் நீயும் காதலிக்கிறீங்களா?”
“நான் காதலிக்கிறேன். அவள் என்னைக் காதலிக்கிறாளா இல்லையா என்பது சந்தேகமாயிருந்தது. இப்போது தீர்மானமாகத் தெரிந்து போயிற்று—”
“என்னவென்று....?”
“இல்லை என்று தெரிந்துவிட்டது......”
“ஏன்? உங்களுக்குள்ளே ஏதாவது மனஸ்தாபமா? எங்கிட்டச் சொல்லலாம்னாச் சொல்லு! என்னாலே சரிப்படுத்தி ராசி பண்ணி வைக்க முடியுமானாப் பண்றேன். பாவம்! உன்னைப் பார்க்கிறதுக்கே இப்போ பரிதாமா இருக்கு கனகராஜ்!”