பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


21

சமயமும், விழாக்களும்


தமிழ்ச்சமுதாயத்தை இணைத்தும் பிணைத்தும் பற்றி பிடித்துக் கொண்டுள்ள இஸ்லாம், ஏகத்துவ நெறியை அடிப்படையாகக் கொண்டது. உருவமற்ற ஒரே பரம்பொருளை உள்ளத்தில் இருத்தி வைத்து வழிபடுவது என்பது ஒவ்வொரு இஸ்லாமியரது தவிர்க்க முடியாத ஐந்து கடமைகளில் ஒன்றாகும். தலைமுறை தலைமுறையாக, தமிழகத்தை தாயகமாப் பெற்ற இஸ்லாமியர் தங்கள் சமயத்தின் ஐந்து ஆதார நெறியினைப் பற்றி, பேணி வருகின்றனர். ஆனால் அவர்கள் வாழ்ந்து வருகிற தமிழ் மண்ணில் பல தெய்வ வழிபாடு பல நூற்றாண்டுகளாக பெரும் பாலான மக்களது சமய உணர்வாக நிலைத்து வந்துள்ளது. அதனைப் பிரதிபலிக்கும் பல விழாக்களும் ஆண்டு தவறாமல், பல ஊர்களில், பலவிதமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருத்தணியில் திருப்படிவிழா, காஞ்சியில் கருடவிழா, திருவண்ணாமலையில் கார்த்திகைதீபம், கும்பகோணத்தில் குட முழுக்கு, பழனியில் தைப்பூசம், மதுரையில் சித்திரைப் பெருவிழா, இராமநாதபுரத்தில் நவராத்திரி, இராமேசுவரத்தில் மகா சிவராத்திரி, இவை போன்ற ஏராளமான பெரும் விழாக்களையும் சிறு விழாக்களையும், பார்த்து கிளர்ச்சி பெறும் பொழுது தமிழக இஸ்லாமியர்களது உள்ளத்தில் இறை நம்பிக்கை, வழிபாடு ஆகிய நிலைகளில் மாறுபாடோ குறைபாடோ ஏற்படுவது இல்லை. என்றாலும் இந்த விழாக்களின் சில அம்சங்கள் இஸ்லாமியரது விழாக்களிலும் புகுந்து இருப்பது வெளிப்படையான தொன்றாகும்.

குறிப்பாக, நபிகள்நாயகம் அவர்களது பெண் வழிப் பேரர்களான ஹுஸைன் அவர்களும் அவரது சுற்றத்தினரும் ஒரு