62 டாக்டர். மு.வ.வின் சிந்தனை வளம்
கட்டாய வீடு, கட்டாயப் பொழுதுபோக்கு, கட்டாய உழைப்பு என்ற அமைப்புகள் வரவில்லை, அதனால் தான், எப்படியாவது வாழவேண்டுமே என்ற கவலை ஒவ்வொ ருவரையும் வாட்டுகிறது. எப்படியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ள சமுதாயமாக அமைக்கவேண்டும்” (ப ; 105, 106) என்று குறிப் பிட்டுள்ளார்.
மு. வ. அவர்கள் படைத்த புதினங்கள் சிலவற்றின் தொடக்கமும் முடிவும் நம் நினைவுத் திரையில் நீங்காத இடம் பெற்றுவிடுகின்றன. எடுத்துக் காட்டாக,
செந்தாமரை :
தொடக்கம் :
“பெற்ற தாயைவிடப் பெரிய துனை இல்லை என்கிறார்கள். எனக்கோ பெற்ற தாயே பெரிய பகையாய் இருக்கிறாள்.’
முடிவு :
“பணத்தின் எல்லை, சட்டம் வெல்வதும் சாட்சி
தேடுவதும்; காதலின் எல்லை, சேர்ந்து வாழ்வதும்
பிரிந்து சாவதும் தவிர வேறு உண்டோ?”
கள்ளோ? காவியமோ?
தொடக்கம் :
‘உலகம் பொல்லாதது. அவர் நல்லவராக இருந் தாலும் உலகம் பொல்லாதது”
முடிவு :
“அந்தக் குடும்ப விளக்கு அணைவதற்கு முன்னே ஒருமுறை அழகாக ஒளிவீசியது”.