டாக்டர். சி. பா. 89
நம்மிடம் அனைத்து வசதிகளும் இருந்தாலும்கூட நாமும் சாதாரண மக்களைப் போல வாழ்ந்து பார்க்க வேண்டும். பிறர் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்பதை நாம் ஒரு நாளாவது உணர்ந்தாவது பார்க்க வேண்டும் என்று மு.வ. சொல்வார். அதுபோல அவர் ப ா ரி மு ைன யி ல் இருந்து பல்கலைக்கழகத்திற்குப் பேருந்தில் சில சமயம் வருவார். இப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் மேற்கொள்ள ேவ ண் டு .ெ ம ன் று சொன்னால், இயன்ற அளவுக்கு நாம் பிறருக்கு உதவவேண்டும்.
முடிந்த அளவில் பிறருக்கு உதவு; நம்முடைய சக்திக்கு இயன்ற அளவு பிறருக்கு உதவு என்று சொல்வார். அவர் சிந்தனைகளிலே சிறந்ததாக எண்ணத்தக்கது :
“தனிமனித வழிபாடு அளவுக்குமேல் போகக்கூடாது” என்பதாகும்.
“இளைஞர்களை அவர்களுடைய உள்ளம் வெதும்பு கின்ற வகையில் அவர்களை ஏசி அவர்களுடைய ஊக்கத் தைக் கெடுத்துவிடக்கூடாது என்பதாகும், அதைத்தான்,
‘பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
- -புறநானுாறு: 182 என்றது புறநானூறு. அதற்கும் மேலே,
எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து’
-திருக்குறள் : 1.25 என்ப து குறள்,