பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 பாளையக்காரர்களும் ஒரு முறைக்கு இருமுறை போரில் முறியடித்தனர். இந்நிலையில், 'தென் பாண்டிப் பாளையங்களில் நிலைமையைச் சீர்ப்படுத்தக் கான்சாகிபு ஒருவனால் தான் முடியும்' என்று கும்பினி அரசாங்கம் கருதி யது. அதன் விளைவாக 1756-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி பிறந்த உத்தரவின் வாயிலாக, கான் சாகிபு மதுரை, திருநெல்வேலி மாவட்டங்க ளின் பேரதிகாரியாக (கவர்னராக) நியமனம் பெற் றான். கான் சாகிபு கையில் இம் மாவட்டங்களின் இராணுவ சிவில் அதிகாரங்கள் யாவும் ஒப்படைக் கப்பட்டன. 'வசூலிக்கும் கப்பத்தொகையை எல் லாம் திருச்சியில் உள்ள காப்டன் காலியாட்டுக்கு அனுப்பவேண்டும்' என்றும் கான்சாகிபுக்கு உத்தர விடப்பட்டது. கான்சாகிபைப் போதிகாரியாக்கிக் கும்பினி அரசாங்கம் பிறப்பித்த இவ்வுத்தரவு ஆர்க் காட்டு நவாபாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், கான் சாகிப் போதிகாரியானதால் நாடு ஒன்றும் சீர் பெறவில்லை. பாளையக்காரர்களுக்குக் கான் சாகிபு என்றால் குலை நடுக்கம். ஆனால், வீரத் தலைவர் பூலித்தேவர் கொடுத்த தைரியத்தை வைத் துக் கொண்டு, நாட்டின் சீர்கேடான நிலைமையை யும் பயன்படுத்திக்கொண்டு, பாளையக்காரர்கள் கான் சாகிபுக்குக் கண்ணாம்பூச்சி' காட்டி வந்தார் கள். கான் சாகிபைக் கண்டால் பதுங்குவதும், அவன் அப்புறம் நகர்ந்தால் பாய்வதுமாக இருந்த னர். ...-- -