பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் } + 3

எழுதித் திரையில், அந்த நடிகனும் அவளும் நெருக்கமாக நடித்த ஒரு காட்சியை வேறு அந்த ஏடு பிரசுரித்திருந்தது ஏற்கெனவே நிரந்தரமாக அவள் மேல் திருவுக்குச் சந்தேகம் உண்டு. முன்னதாகவே ஒரு முறை துரோகம்

செய்ததவள். மறுபடியும் துரோகம் செய்ய மாட்டாள். என்பது என்ன உறுதி? பெண்தானே? அதுவும் சினிமா உலகைச் சேர்ந்தவள். தவிர்க்க முடியாத ஒர் இரகசியக் காரணத்துக்காகத் தன்னிடம் கட்டுப்பட்டுக் கிடக்கிறவள் உண்மையில் விசுவாசமாகத்தான் இருந்தாக வேண்டு மென்று எப்படி எதிர்பார்க்க முடியும்? ஏதோ அக்மி மிதித்து அருந்ததி பார்த்துத் தாலி கட்டிய மனைவி பாழ் போகிற மாதிரி இந்த ஸெலுலாய்ட் பத்தினிையை அவன் எதிர்பார்த்திருக்கக் கூடாது. இவளது இணை யிலாக் கவர்ச்சியும், மாபெரும் சொத்தும் ரொக்கமும் இனி வேறு கைக்கு இவள் போய் விடக் கூடாது என்பதில் திருவை அதிக அக்கறை கொள்ளச் செய்திருந்தன. -

நெருப்பில்லாமல் புகையாதென்று தோன்றியது. உடனே இரண்டு நாள் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை இரத்துச் செய்துவிட்டு முன்னறிவிப்பின்றி மதுரையி லிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்னை சென்றான் திரு. பங்களாவுக்குள் அவன் நுழையும் போதே வாசலில் கூர்க்கா பயபக்தியோடு அருகே வந்து, 'அம்மா ஹைதரன் பாத் போயிருக்காங்க ...அங்கே ஒரு வாரம் தெலுங்குப்பட அவுட்டோர் கால்வி'ட்' என்றான். உள்ளேவேலைக்காரி, சமையல் காரன், மற்ற எடுபிடிகள் எல்லாம் இருந் தார்கள். சரி வந்ததுதான் வந்தோம், உடனே திரும் பினால்சரியாயிராது என்று ஒரு நாள் அங்கே தங்கினான். மனதுக்குள் ஒரே சந்தேகம் குடைந்தது. இரவு படுக்கை யறையில் அவளுடைய தனி உபயோகத்திலிருந்த ஸ்டீல் பீரோ, வாட் ரோப், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் போலீஸ் ரெய்டு போலச் சோதனை போட்டதில் தெலுங்கில் எழுதப்பட்ட சில கடிதங்கள் கிடைத்தன.