பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கனல் - 翼5让

கொல்வதற்குச் சூழும் ஆட்களிடம் இருந்து தப்பிவிடக் கூடாதா என்று கூட இவன் இப்போது எண்ணினான். தன்னுடைய மகன் என்று தெரியாமல் தானே அவனைக் கொல்ல ஆள் ஏவியதை மறுபடி தினைத்தால் கூடப் பாதாதிகேசபரியந்தம் நடுங்கியது. தான் ஆடா விட்டா லும் சதை ஆடும் என்பார்களே அப்படிச் சதை ஆடியது. மனமும், உடலும், பெரும் பாதிப்புக்கு ஆளாகி அவன் மூர்ச்சையானான். நல்ல வேளையாக .ெ வ வளி ேய போயிருந்த உதவியாளன் கன்னையா அந்த நேரத்தில் திரும் பியிருந்தான். உடனே திருவை அவனுக்கு மிகவும் வேண்டிய ஒரு டாக்டரின் தனியர்ர் மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது. பத்திரிகைகளில் செய்தி வந்துவிடும் என்பதாலும் பலர் பார்க்க வருவார்கள் என்பதாலும் வேறு சில இரகசியங்கள் கருதியும் திரு எப்போதும் மாடவீதியிலி ருந்த இந்த தனியார் மருத்துவமனையில் சேர்ந்து-தனி பிடத்தில் ஓய்வு எடுப்பதாக மட்டும் வெளியே தகவல் தெரி விப்பது வழக்கம். யாரையும் தன்னைப் பார்க்க அநுமதிப் பதி லை. இந்த இரகசிய ஏற்பாட்டால் ரோஸி முதல் தாண்டவராயன் வரை அவனோடு எப்போதும் போல் நெருங்கிப் பழக வாய்ப்பிருந்தது. சினிமா தடிகைகள், ! படத் தொழிலின் பெரும் புள்ளிகள் எந்நேரமும் அந்தரங்க மாகத் தேடி வந்து போக இந்தத் தனியார் மருத்துவமனை பெரிதும் உதவியாயிருந்தது. பொது மருத்துவமனை யாகவோ அரசாங்க மருத்துவமனையாகவே இருந்தால் யார், யார் பார்க்க வருகிறார்கள் என்பது இரகசியமாயி ராது. பத்திரிகை நிருபர்கள் சதாகாலமும்-வளைய வளைய வந்து கொண்டிருப்பார்கள். - ஏதோ திடீர் அதிர்ச்சி காரணமாக மிகவும் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் முழு ஒய்வு தேவைப்படுவதாகவும் டாக்டர் கூறினார். மருந்துகளும் தூக்க மாத்திரையும், கொடுத்துத் துரங்கச் செய்தார். விடிந்ததும், அவனுக்கு நினைவு வந்தவுடன் காலைப் பத்திரிகைகளைத் தேடி