பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நா. பார்த்தசாரதி

விட்டு நடப்பது போன்றதொரு பெரிய தைரிய போதையை அவனுக்கு அளித்திருந்தது.

எதிரிக்கு எதிரி தனக்கு நண்பன் என்ற முறையில் தான் திருமலை, இங்கர்சால் மருந்தக உரிமையாளர் பொன்னுச்சாமியை அணுகியிருந்தான். பொன்னுச்சாமி யின் உருவத்தையும், செம்மறியாட்டுக் கடாக் கொம்புகள் போன்ற அவரது மிடுக்கான மீசையையும் பார்த்தே மிரண் டவர்கள் பலர். உள் பட்டணவாசிகளையும், உடையார் களையும் அவர்களை ஆதரித்த மேட்டுக்குடி மக்களையும் பெர்ன்னுச்சாமியும் அவருடைய சுயமரியாதை இயக்க ஆட்களும் முழு மூச்சாக எதிர்த்தனர். பொன்னுச்சாமியும் அவரது இயக்கமும் திருமலையைக் கவர்ந்ததற்கு முக்கிய மான காரணம் இதுதான். அவன் யாரை எதிர்க்க விரும்பி னானோ அவனை மேற்படியார்கள் அவனுக்கு முன் பிருந்தே எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட வர்கள்தான் அந்த ஊரில் தனக்கு நிரந்தர அரணாக, இருக்க முடியும் என்று திருமலை நம்பினான்.

நந்தவனத்துப் பண்டாரமும் அவன்மேல் இரக்கப் பட்டுச் சின்ன உடையார் அவனைத் திட்டிய மோசமான ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் சொல்லிய பள்ளிக்கூட ஆசிரியரும் வெறும் நல்லவர்கள் மட்டும்தான். இனி மேலும் அவன் அந்த ஊரில் காலந்தள்ள வேண்டுமானால் அதற்கு நல்லவர்கள் தயவு மட்டும் போதாது, வல்லவர் களின் பாதுகாப்பும் வேண்டும் என்பதைத் திருமலை தெளிவாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த மலைப் பிரதேசத்திலும், சுற்றுப்புறத்து ஊர்களிலும் பொன்னுச் சாமியின் இனத்து மக்கள் தொகை அதிகமாயிருந்தது. உள்பட்டணத்து உடையார்கள் எப்போதுமே பொன்னுச் சாமியின் இன மக்களை விரோதித்துக கொள்ளத் தயங்கு வார்கள். ஆள் கட்டுள்ளவர்களின் விரோதத்தை எப் போதுமே தவிர்த்து விடுவது உடையார்களின் வழக்கம்.