பக்கம்:மூலக்கனல் (நாவல்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - 点”。 பார்த்தசாரதி

இரண்டு மூன்று வயது அதிகமானவர்கள் கூட இப்போது அவனருகே கைகட்டி, வாய் பொத்தி நின்று, 'அண்ணன் மட்டும் சரின்னு ஒரு வார்த்தை சொல்லித் தேதி குடுங்க? நாளைக்கே கூட்டத்துக்கு ஸ்ெட் அப் பண்ணிடலாம் - என்று பேசத் தொடங்கினார்கள் இந்தச் சுற்றுப்புற மரி யாதைகள் உள்ளே தன்னடக்கத்தையும் பண்பாட்டையும் வளர்க்காமல் புறத்தே மட்டும் அவன் வளர்ச்சியைப் பெரி தாக்கின. பப்பாளி மரம் போல் முருங்கை மரம் போல் உள்ளே வைரம்பாயர்த மேற்பார்வைக்கு மட்டும் மரும். டத்தக்க வெறும் புறவளர்ச்சியாயிருந்தது அது.

சில ஆண்டுகளில் பொன்னுச்சாமி அண்ணனுக்கு "முதல் ஹார்ட் அட்டாக் - இரண்டாவது ஹார்ட் அட் டாக் என்று அடுத்தடுத்து இரண்டு அட்டாக் வந்து டாக் டன் அறிவுரையின் பேரில் அவர் வீட்டோடு ஒடுங்கித் தங்கி ஓய்வு பெற ஆரம்பித்தார். இது திருமலையின் பிரமுகத்து வத்தைத் திடீரென்று உயர்த்தி அதிகமாக்கியது. அந்த வட்டாரத்தின் ஒரே பிரமுகராக அவன் உயர்ந்தான். உள் பட்டணத்து ஜமீன்தார் வகையறாவும், காங்கிரஸ் சட்ட சபை, மந்திரி பதவி என்று வேறு வழியில் மேலே போய் முன்னேறிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனாலும் அவர்களுடைய வளர்ச்சி திருமலையின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியதாக இல்லை. ஜமீன்தார் ஒரு திறப்பு விழா வுக்கோ, அடிக்கல் நாட்டு விழாவுக்கோ வந்து பேசினால் கூடுகிற கூட்டத்தைவிடத் திருமலை தோடியில் பேசினால், கூடுகிற கூட்டம் பல மடங்கு அதிகமாகவே இருந்தது.

இணையற்ற இந்தக் கூட்டமும் இந்தப் புகழும் தந்த ஆணவ நெறியில் அந்த வருஷ நடுப்பகுதியில் ஒரு தவ. றான காரியத்தை முன்நின்று நடத்திக் கைதாகி முதல் தடவையாக ஜெயிலுக்கும் போனான் திருமலை. பொன் னுச்சாமி அண்ணன் சம்மதம் தெரிவித்து ஒப்பாத அந்தப் போராட்டத்தில் அரை மனத்தோடுதான் அவன் இறங்கி னான். ஆனால் அது பொன்னுச்சாமி அண்ணன் எச்சரித்