பக்கம்:மேனகா 1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மேனகா

இதோ போறானே, இந்தப்பைத்தியத்துக்கும் ஒனக்கும் சொந்தமாடா ? - என்றார். அவர் இல்லையென்றார்; உடனே திகம்பாமையர், “ஏண்டா! இந்த பைத்தியம் எப்படிடா வக்கில் வேலை செய்கிறான்? அதுதான் தெரியல்லே! எலிவாலைப்போல குடிமியும், தோலுரிச்ச கோழி மாதிரி உடம்பும் கோமாளி அழகு வழிகிறதப்பா!” என்றார்.

சாப்பாட்டு ராமையங்கார்:- இவன் பெண்டாட்டியை நீங்க பாத்த தில்லையே! கிளி கிளி தான். நபுன் சகன் கையிலே ரம்பை அகப்பட்ட மாதிரி வந்து வாய்ச்சிருக்க அசட்டுக்கு ஐங்கலம் காமம் என்பதைப்போல, குருட்டு நாய்க்கு முழுத் தேங்காய் அகப்பட்டமாதிரி அகப்பட்டுக்கிண்டா! அவ தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் பொண்ணாம். தங்க விக்கிரக மின்னாலும் தகும்”- என்று இரசம் ஒழுகும் படி கூறினார். உடனே திகம்பரமையர், “ஆமா! தாலி கட்டினத்தினாலேயே அவ இவனுக்குப் பெண்டாட்டியாய் விடுவாளா! அவ பலே கைகாரியாச்சே! அது தஞ்சாவூர் மராட்டியர் வீட்டிலே யெல்லாம் மேஞ்ச மாடாச்சே! அவளுக்கு இவன் மஞ்சள் அரைச்சுக் கொடுக்கத் தான் ஒதவு வான். இவனே மதிச்சுக் கூட அவ பேசறலில்லையே” என்றார்.

அன்னக்காவடியா பிள்ளை:- அடே ஆமாடா, எனக்குத் தெரியாத சங்கதி மாதிரி சொல்லுறீங்களே. தஞ்சாவூருலே ஒரு மராட்டியனை வச்சிருக்கினு ஒரு வருசமா இவன் கிட்ட வரமாட்டேன்னாளாமே! அவதானேடா? அந்த மரக்காயன் ஊட்டுலே கணக்கெளுதற பாப்பாரப் பையன் சாமா இருக்கிறானே; அவந்தானேடா இந்தவராகசாமி அக்காளையும் தங்கச்சியையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறான்- என்றார்.

உடனே திகம்பரமையர், “மொகத்தைப் பாருடா! மூணாம் பேஸ்து மாதிரி. ஆறு மாசம் பட்டினி இருந்தவன் போல இருக்காண்டா! வக்கீல் வேலையிலே சோத்துக்கே தாளம் போலே இருக்குது. மேலே துணி இல்லை. இடுப்புத் துணி சொக்கா ரெண்டோடே வெளியிலே வந்துட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/206&oldid=1250829" இலிருந்து மீள்விக்கப்பட்டது