பக்கம்:மேனகா 2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

மேனகா

எந்த அறைக்காவது உன்னை அனுப்புகிறோம். நான் இவ்விடத்தில் அதிக ஜாக்கிரதையாக இருக்கச் சொன்னதற்காகவா நீ இப்படிச் செய்தாய்? இதோ போய் உத்தரவு அனுப்புகிறோம்; வேறு அறைக்குப் போகத் தயாராக இரு - என்று கோபமாகச் சொல்லிவிட்டு துரைஸானி துரையுடன் வெளியிற் சென்றாள். பணிமகள் மிகவும் அவமானம் அடைந்தவளைப்போலக் கீழே குனிந்து கொண்டாள். தமது மனதிற்கு உகந்தவிதமாய் நடந்துகொண்டிருக்கும் அந்த நற்குணவதி போய் விடுவாளோ வென்றும், வேறு எவள் வருவாளோ வென்றும் பலவாறு நினைத்து ஏக்கங்கொண்டு அவன் அந்த மங்கையின் முகத்தை நோக்கினான்.


★★★★★★★★★★


23வது அதிகாரம்

பாதாள எட்சினி வசியம்


தினைந்தாவது அதிகாரத்தின் இறுதியில் நைனா முகம்மது தனது சயன அறையிலிருந்து ஒடிய நூர்ஜஹானைத் துரத்தியபோது உட்புறத்தில் அவளது அக்காள் இருந்ததைக் கண்டு திரும்பிவந்து, மிகவும் அச்சமும் கலக்கம் அடைந்து படுத்திருந்தான் என்பது சொல்லப்பட்டதல்லவா? அவன் அன்றிரவு முற்றிலும் துயிலே கொள்ளாமல் மிகவும் கவலை கொண்டு வருந்திக் கிடந்தான். மேனகாவின் விஷயத்தில் தான் கொண்ட எண்ணம் நிறைவேறாமல் போனது ஒருபுறம் வதைக்க, தனது மனைவி யாவற்றையும் அறிந்துகொண்டு தன்னை அவமானப்படுத்தியது, இன்னொரு புறம் பொறுக்க லாற்றாமல் அல்லல் படுத்த, அவன் அன்றிரவு முற்றிலும் வேதனைக் கடலில் ஆழ்ந்து கிடந்தான். ஆனால், நற்குண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/173&oldid=1252322" இலிருந்து மீள்விக்கப்பட்டது