332
மேனகா
ஆனதென்பதைப்பற்றி என்னுடைய தகப்பனாரிடம் கேட்டெழுதும்படி நீ எழுதியிருந்தா யல்லவா? அதைப்பற்றி நான் அவரிடம் கேட்டேன். அவர் தாமே கவர்னரிடம் சிபார்சு செய்து அந்தவேலை கொடுக்கும்படி செய்ததாகவும், அந்த விஷயத்தை ரகசியமாக வைத்துக் கொள்ளும்படியாகவும் என்னிடம் தெரிவித்தார். இதை உன்னுடைய பர்த்தாவிடம் சொல்லவும்.
நான் இன்றைய காலையில் இன்னொரு விஷயம் என் புருஷனிடம் கேள்விப்பட்டேன். அதுவும் உனக்கு அவசியம் தெரியவேண்டியதே. எங்களுடைய கடையில் குமாஸ் தாவாவும், என் புருஷனுக்கு துர்மந்திரியாகவு மிருந்து உன் விஷயத்தில் வஞ்சகம் செய்தவரான சாமாவையருடைய கேஸ் நேற்றோடு முடிவடைந்ததாம். அவர் பங்களாவை விற்ற விஷயத்தில் பொய்யான பத்திரம் தயார்ப் படுத்தியதற்காகவும், ஆள் மாறாட்டத்திற்காகவும் ஐந்து வருஷம் கடினக் காவல் தண்டனை அடைந்தாராம். அதைக் கேட்க, நிரம்பவும் விசன முண்டாகிறது. அவருடைய கதி, கெடுவான் கேடு நினைப்பான் என்றபடி யானது.
தவிர, உன் விஷயத்திலும், என் விஷயத்திலும் கைம்மாறு கருதாது எவ்வளவோ பாடுபட்டு உதவி செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சமீப காலத்தில் போலீஸ் கமிஷனர் உத்தியோகம் கிடைத்திருக்கிறது; அவருடைய நற்குணத்திற்கும் சாமர்த்தியத்திற்கும் அந்தப் பதவி ஒரு பெருத்த சன்மானமா காது. ஆனால், அதிசீக்கிரம் அவர் இன்னம் உயர்ந்த பதவிக்கு வருவாரென்று என்னுடைய தகப்பனார் சொல்லுகிறார். நீ உன்னுடைய கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி என்னுடைய தகப்பனார் இந்த சஞ்சீவி ஐயரை விடுத்து உன்னுடைய நாத்திமார்களைத் தேடச் செய்தார்; அவர் அவர்களைத் தேடிப்பாராத இடமே சென்னையில் இல்லை; அவர்கள்