உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேதினம் வைகாசியில் கருடசேர்வை, ஆனியில் திருமஞ்ச னம், ஆடியில் பூர உற்சவம், ஆவணியில் அவிட்டம், புரட்டாசியில் சனிக்கிழமை உற்சவம், ஐப்பசியில் தீபாவளி, த்திகையில் தீபவிழா, மார்கழியில் திருவாதிரை, தையில் பூசம், மாசியில் மகம், கார்த் பங்குனியில் உத்திரம், சித்திரையில் பௌர்ணமி. இப் மாதந்தோறும் நடத்தி, தலைமுறை தலைமுறையாகப் பழக்கப்பட்ட மக்களி டையே மே தின விழாக் கொண்டாட முற்பட்டிருக் கிறோம். மே விழா, மேதினியில் மக்களுக்கு வாழ்வு அளிக்கும் விழா என்று கூறினால்,மக்கள் சுலபத்தில் நம்பமாட்டார்கள்; ஆச்சரியப்படுவார்கள். நாட்டு மக்களிலே, சிந்திக்கக் கற்றுக்கொண்ட பகுதியின ருக்கு மட்டுமே, மே தின விழாவின் முக்கியத்துவம் தெரியும். மற்றவர்கள், இன்னமும் நான் முன்னால். குறிப்பிட்ட பல்வேறு திருவிழாக்களிலேயே ஈடுபடுப் வர்கள் - குடும்பம் குடும்பமாக!. பொன்மலைத் திராவிட வாலிபர்கழகத்தார், மே தின விழாக் கொண்டாட முன்வந்தது பற்றி, நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சில நகரங்களிலும், நமது நண்பர்கள் இந்த விழாவைக் கொண்டாடுகின்