பக்கம்:மொழியின் வழியே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தப் புத்தகம்

நா.பார்த்தசாரதி பல திறன்கொண்ட படைப்பாளி. அவரது பங்களிப்பு நவீன தமிழ் இலக்கிய உலகில் பல தளங்களில் தம் பங்களிப்பைத் தந்துள்ளன.

மொழியின் மீதும், தாய்மொழி வழியே கலை இலக்கிய, அறிவின் வளர்ச்சியிலும், நாட்டுமக்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டவர் நா.பா.

சுமார் 41 ஆண்டுகட்கு முன் அவர் தொலைநோக்குப் பார்வையுடன் சமகாலப் போக்கை விமர்சனம் செய்து அதைச் சீர்செய்ய வழியும் காண்பித்துள்ளார்.

கல்வியாளர்களும், அரசியல் சார்ந்தோரும் மிகவும் ஊன்றிப் படிக்க வேண்டிய நூலிது. ஆனால், இவர்களை மீறி தனிமனிதர்கள் வாசகர்களாகச் செயல்படவும் வேண்டும் எனத் தெளிவுடன் கூறியுள்ளார் இத் தொகுப்பில்.

ஒரு சில கட்டுரைகள் தவிர மற்ற எல்லாக் கட்டுரைகளுமே எளிய நடையில் தெளிவாக, சுருக்கமாகச் சேதி சொல்கின்றன. அந்த ஒரு சில கட்டுரைகள் தன் பாடுபொருளால், நடையால் அவர் பண்டிதருக்குப் படித்தவர் என்பதை மெய்ப்பிக்கின்றன.

தேவை கருதி இந்த அரிய தொகுப்பை மீண்டும் பதிப்பிப்பதில் பெருமை கொள்கிறோம். - -

- தமிழ்ப் புத்தகாலயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/5&oldid=621350" இலிருந்து மீள்விக்கப்பட்டது