80
மௌனப் பிள்ளையார்
தான். உடனே பம்பாய்க்குக் கிளம்பினார். நல்லவேளையாக, ஆபத்சகாயமய்யர் குறிப்பிட்ட ஆசாமி பம்பாயில் அகப்பட்டார்.
கோதண்டராமய்யர் அவரைக் கண்டு, தான் வந்த விவரங்களைச் சாங்கோபாங்கமாகக் கூறி முடித்தார்.
பிள்ளை வீட்டுக்காரர் அதற்குமேல், "பெண்ணுக்குப் பாடத் தெரியுமா? வயசு என்ன? வரதட்சணை எத்தனை?" முதலிய விவரங்களை யெல்லாம் அறிந்து கொண்டார். பிறகு கோதண்டராமய்யர், "பிள்ளையை நான் பார்க்கலாமோ?" என்று கேட்டார்.
"பிள்ளையா? அவன் சென்னைப் பட்டினத்திலல்லவா இருக்கிறான்!" என்றார் பிள்ளையைப் பெற்றவர்.
கோதண்டராமய்யர், "எங்கே? சென்னைப் பட்டினத்திலா?" என்று கேட்டார் தூக்கிவாரிப் போட்டவராய்.
"ஆமாம். சென்னைப் பட்டினத்தில்தான்; ஜார்ஜ் டவுனில் பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கிறான்” என்றார் பிள்ளை வீட்டுக்காரர்.
கோதண்டராமய்யருக்கு ஆச்சரியமாயிருந்தது. "பிள்ளையார் கோயில் தெருவில் இருக்கும் பிள்ளையைத் தேடியா இத்தனை ஊர்கள் அலைந்தோம்? நாம் இருக்கிற தெருவுக்குப் பக்கத்தில் அல்லவா இருக்கிறது பிள்ளையார் கோயில் தெரு? அந்தப் பையன் யாராக இருக்கலாம்?'; என்றெல்லாம் யோசிக்கலானார்.
சென்னைக்கு அவர் வந்து சேர்ந்ததும் மனைவியைக் கூப்பிட்டு, "அநாவசியமாய் என்னை ஊரெல்லாம் அலைய வைத்தாயே? கடைசியில் பிள்ளை வெளியூரிலா அகப்பட்டான்? பிள்ளையார் கோயில் தெருவில் அல்லவா ஒரு பையன் இருக்கிறானாம்? அவனைக் கண்டுபிடிப்பதற்கு டில்லிக்கும் பம்பாய்க்கும் அலையச் சொன்னாயே!" என்றார்.
"பார்த்தயளர்? இப்படி நாலு இடம் போய் அலைந்தால் தான் பிள்ளை கிடைப்பான் என்றுதான் நான் முதலிலேயே