உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:யாரால் யாரால் யாரால்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.46 யாரால்? யாரால்? யாரால்? விட்டால் உலகம் இயங்குமா? சிகரெட் பிடிக்க நெருப்பு எழுமா? அடுப்பெரிக்க விறகுக் கட்டையில் தீ வருமா? எனவே, அக்கினியைக் காணாமல் உலகமெல்லாம் அலறுகிறது. அந்த நேரத்திலே உலகைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ரிஷியும், ரிஷிபத்தினியும் தேவலோகம் திரும்புகிறார்கள். பெண்ணைக் காணவில்லை; ஒன்றும் புரியவில்லை. முறையிடு கிறார்கள். அந்த நேரத்திலே வாயு பகவான், இந்த விஷயங்களை யெல்லாம் இரகசியமாகத் தெரிந்து வைத்துக் கொண்டு ஒற்றனாக இருக்கிற வாயு பகவான், இதை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவர்களுக்கு விருந்து வைத்து, சிறப்பு விருந்தினர்களாக சிவன், விஷ்ணு, பிரம்மா, எமன் அனை வரையும் அழைக்கிறான், தேவர்கள் உட்பட, அனைவரும் வருகிறார்கள். பெற்றோர்களும் வந்திருக் கிறார்கள். எமனிடத்திலே மாத்திரம் மூன்று இலைகள் போடச் சொல்கிறான் வாயு பகவான். சிவன், 'என்ன அவனுக்கு மாத்திரம் மூன்று இலைகள்? எங்களையெல்லாம் அவமதிக்கிறாயா?' என்று கேட்கிறார். 'இல்லை, இல்லை; கொஞ்சம் பொறுங்கள்' என்று சொல்லி விட்டு, எமனைப் பார்த்து, 'எமனே, உன்னுடைய வயிற் றிலே இருக்கின்ற அந்தப் பெண்னை வெளியே உமிழ் வாயாக என்றதும் எமன் எதுவும் சொல்ல முடியாமல் அந்தப் பெண்ணை வெளியே உமிழ்கிறான். அந்தப் பெண் வெளியே வந்து இன்னொரு இலையிலே உட்காருகிறாள். இரண்டு இலை - இரட்டை இலை - ஆயிற்று?