பக்கம்:ரோகந்தாவும் நந்திரியாவும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போன்ற வலுவான குட்டிக் குரங்கால், ஒரே மூச்சில் தாண்டி விடமுடியாது. அப்போது நல்ல மழை பெய்திருந்ததால், ஒடையில் ஒரே வெள்ளம் அது ஆழமாயும் சுழல் நிறைந்தும் காணப்பட்டது. ஏமாற்றத்துடன் நந்திரியா வீடு திரும்ப நினைத்தது. அப்போது, திடீரென்று அதன் பார்வையில் ஏதோ தென் பட்டது. கரைக்கும் தீவுக்கும் இடையே ஏதோ கறுப்பாக நீருக்கு மேல் தெரிந்தது. நன்ருக உற்றுப் பார்த்தது. அது ஒரு பெரிய பாறையின் மேல்புறம் என்பதை அறிந்து கொண்டது. ஒடைநீர் அதில் மோதி மோதிச் சுழன்றது. பால்போல் நுரை பொங்கி எழுந்தது. நீருக்கு மேல் பாறை சிறிதளவே தெரிந்தது. இருந்தாலும், அந்த இடம் போதும் என்று நந்திரியா நினைத்தது. ஒரே பாய்ச்சலில் அந்தப் பாறையை அடையலாம். அங்கிருந்து இன்னொரு பாய்ச்