பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செத்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப்படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, எனப் பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர். கா. கோவிந்தனார் அவர்கள் "தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர்: பைந்தமிழ்ப் புலவராய் உயர்த்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண்கொண்டு ஆய்த்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன் தமிழ்ச்சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை உடையவர், - புலவர். கா. கோவிந்தனார் அவர்கள் புலவர்களுள் ப்ெரும் புலவராய் விளங்கி, திருவண்ணா மலை குன்றக்குடி ஆதீனத்தாரின் புலவரேறு பட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/4&oldid=888919" இலிருந்து மீள்விக்கப்பட்டது