பக்கம்:வஞ்சி மூதூர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பெரும்பாணற்றுப்படை-விளக்கவுரை." "புலா அம்பாசறை.” "என் தமிழ்ப் பணி” ஆகிய இலக்கிய கால்களையும் "தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்." "தமிழக வரலாறு-கோசர்கள்.” - "தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்." ஆகிய வரலாற்று நூல்களை வெளியிட்டுள்ளோம். புலவர் அவர்கள் விட்டுச் சென்றுள்ள, அச்சு வடிவம் பெறாத அவருடைய கட்டுரைகளைத் தொகுத்து இன்று, வஞ்சி மூதூர் என்ற இக்கட்டுரைத் தொகுப்பைத் தமிழ்கூறு நல்லுலகத் தின் முன் படைக்கிறோம். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக் கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணிசெய்ய அளித்துவிட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர் களாகிய தாரிகள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவினையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வஞ்சி_மூதூர்.pdf/6&oldid=888964" இலிருந்து மீள்விக்கப்பட்டது